தனி கட்சி தொடங்கும் ஓபிஎஸ் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


வரும் 21-ந்தேதி மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கிறார் என்று, அதிமுக  முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவரின் பெட்டியில், "ஓபிஎஸ் தற்போது அதிமுகவில் ஒரு உறுப்பினராக கூட இல்லை. அவருக்கும், அதிமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. அதிமுகவுக்கு அவர் திரும்பி வர எந்த வாய்ப்பும் இல்லை.

தற்போது அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்ட கூட்ட இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். 

புதிய கட்சிக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யவே இந்த கூட்டத்தை ஓபிஎஸ் கூட்ட வாய்ப்புள்ளது. அதை தவிர அவருக்கு வேறு வழியும் இல்லை" என்று பொன்னையன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMk OPS New Party Strat plan 122022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->