நாளை காலை அதிமுக தலைமை அலுவலகத்தில்.., சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இன்று விசாரணை செய்து, முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஈரோடு இடைத்தேர்தலில் இருவருக்கும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளதால், பொதுக்குழுவை கூட்டாமல், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு உள்ளது.

இன்று மாலை 7 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கோட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம் நாளை காலை 9 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS Side erode election 2023 info


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->