“டிசம்பர் 15-க்குள் அதிமுக ஒன்றிணையாவிட்டால்…திருத்தப்படுவீர்கள்!” – எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கெடு! - Seithipunal
Seithipunal


அதிமுக உள் கலகம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்பு குழுக் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “2019, 2021, 2024 என மூன்று பெரிய தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வி மட்டுமே கண்டுள்ளது. இந்த நிலையை பார்க்கவே கண்ணீர் வருகிறது. டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம்,” என எச்சரித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு எதிராக சட்டபோராட்டம் நடத்திய ஓபிஎஸ், நீதிமன்ற தீர்ப்பில் பலன் பெறாததும், பொதுக்குழுவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் நினைவிருக்கிறது. கட்சிக் கொடியை ஏந்தி அலுவலகம் செல்ல முயன்றபோது நடந்த மோதல் அதிமுக வரலாற்றில் பெரிய பிளவு ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது உரிமைகளை மீட்டெடுக்க “அதிமுக உரிமை மீட்பு குழு” என்ற அமைப்பை உருவாக்கிய ஓபிஎஸ், நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு லட்சக்கணக்கில் வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜகவுடன் நல்ல உறவில் இருந்த அவர், பின்னர் தமிழக பாஜக தலைமை தன்னை ஒதுக்கியதாக குற்றம் சாட்டி கூட்டணியில் இருந்து விலகினார்.

அதேபோல், எடப்பாடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரனும் என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறினார். சமீபத்தில் ஓபிஎஸ் – டிடிவி தினகரன் – செங்கோட்டையன் – சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து எடப்பாடி தலைமையை அகற்றும் முயற்சியில் உள்ளனர்.

செங்கோட்டையன் ஏற்கனவே எடப்பாடி மீது கெடு விதித்த நிலையில், தற்போது ஓபிஎஸ்ஸும் டிசம்பர் 15-ஆம் தேதியை கடைசி நாள் என அறிவித்திருப்பது அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி அதிமுகவில் பெரிய மாற்றங்கள் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK does not unite by December 15th you will be corrected OPS warns Palaniswami of being too lazy


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->