அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹10,000 கருணைத்தொகை வழங்கப்படும் -அதிரடித் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடியார்! - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை (பிப். 24, 2026) முன்னிட்டு, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக மீது விமர்சனம்:
நிகழ்ச்சியில் அதிமுகவின் 3-ம் கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஈபிஎஸ், திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வால் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டதாகக் கடுமையாகச் சாடினார்.

முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள்:

மெகா உதவி: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹10,000 கருணைத்தொகை வழங்கப்படும்.

ஆண்டுதோறும் பொங்கல் பரிசு: பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ₹1,000 ரொக்கம் வழங்கப்படும்.

இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை: வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹2,000 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

கடன் தள்ளுபடி: தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

தொழில்சார் சலுகைகள்: மீனவர்களுக்கான தடைக்கால மானியம் ₹12,000-ஆக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.

தேர்தல் நெருங்கும் வேளையில், '₹10,000 கருணைத்தொகை' என்ற அறிவிப்பு அதிமுகவின் மிகப்பெரிய தேர்தல் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' ஆகப் பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK 3rd Manifesto Cash Grants Stipends and Loan Waivers Announced


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->