திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை திறந்து வைத்த முதல்வர்!
CM Stalin Kanyakumari Visit New Homes Statues and Welfare Aids
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி நிகழ்வுகள்:
திருவள்ளுவர் சிலை நுழைவு வாயில்: அரசு விருந்தினர் மாளிகை அருகே ₹1.45 கோடி மதிப்பிலான 'அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை' முதல்வர் திறந்து வைத்தார்.
அகதிகள் மறுவாழ்வு: பெருமாள்புரம் முகாமில் இலங்கை அகதிகளுக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட 90 வீடுகளைத் திறந்து வைத்து, அங்கிருப்பவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
நாகர்கோவில் மாலைத் திட்டங்கள்:
புத்தளம் கல்லடி விளையில் கருணாநிதி சிலை மற்றும் ஸ்டாலின் படிப்பகத்தையும், நாகர்கோவில் வேப்பமூட்டில் ₹50 லட்சம் மதிப்பிலான பொன்னப்ப நாடார் சிலையையும் முதல்வர் இன்று மாலை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
நாளை (பிப். 25) நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி திடலில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்:
நலத்திட்ட உதவிகள்: சுமார் 25,000 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டுத் தூத்துக்குடி வழியாக விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
English Summary
CM Stalin Kanyakumari Visit New Homes Statues and Welfare Aids