3000 ஆயிரம் குடும்பங்களை உடனே வெளியேற சொன்ன தலிபான்கள்.! காந்தஹாரில் வெடித்தது போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ படையினர், கடந்த மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறினர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியையும் அமைத்துள்ளனர். தாலிபான்கள் ஆட்சி செய்து வருவதால், அந்த நாட்டில் பெண்களின் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காந்தஹாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டு அராஜகம் செய்து வருகின்றனர், தலிபான்களின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காந்தஹாரின் தெற்கு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆப்கான் நாட்டின் பாதுகாப்பு படை, முன்னாள் ராணுவ தளபதிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவர்.

இவர்களை உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கானோர் காந்தஹார் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

afghan kanthahar people protest


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->