அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு!
ADMK sevur ramachandran
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூரில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.வான சேவூர் ராமச்சந்திரனின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமச்சந்திரனின் இல்லம் மட்டுமின்றி, அவரது மகனின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் சுமார் 20-க்கும் அதிகமான அதிகாரிகள் பல பிரிவாகப் பிரிந்து சோதனையில்கொள்ளவுள்ளனர். வீட்டின் முக்கிய பகுதிகள் மற்றும் ஆவணங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
சோதனை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதற்கான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு வெளியே திரண்டதால், போலீசார் குவிக்கப்பட்டு தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.