#BigBreaking || எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த ஓபிஎஸ்... சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி, ஓ பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்தது என்றும், அந்த முறையிட்ட மனுவில் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

பொதுக்குழுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கூறி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது.

மேலும் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தது. இந்நிலையில் வருகின்ற 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், அது உட்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்தது. மேலும் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு மட்டுமே முந்தைய உத்தரவுகள் செல்லும் என்றும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு இது செல்லாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.

இந்த நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி இடம் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழுவுக்கு தடை கோரி மனு அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops eps issue chennai hc new case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->