அடுத்த கட்ட ஏற்பாடுகள்.. இபிஎஸ் இல்லத்தில் குவிந்த முன்னாள் அமைச்சர்கள்.!!
admk minister meeting for eps home
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதி தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில். தாக்கல் செய்யப்பட்ட மூன்று கூடுதல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கும் இன்று விசாரணைக்கு வருவதால், இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
admk minister meeting for eps home