விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என மாறலாம்.. அதிமுக ஜெயக்குமார் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்களை அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது என்றும் விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அம்மா உணவகங்களை குறித்து கருணாநிதி உணவகங்களை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களே இதை விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம்.

தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். மேலும் தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. திமுக மும்மொழிக் கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது இன்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK ex minister Jayakumar speech about DMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->