வழக்கு வாபஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு... சிக்கலில் இருந்து விடுபட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த  மணிகண்டன் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்புகார் ஒன்றை கொடுத்தார். 

அதில், "மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். இதனால் கருவுற்ற என்னை மிரட்டி கருவைக் கலைக்க செய்தார். 

இப்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். என்னை ஆபாசமாக  பிடித்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.. 

இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நடிகை சாந்தினி, மணிகண்டன் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக கூறயதையடுத்து வழக்கு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk ex minister case vapus


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->