#BigBreaking || அதிமுக முன்னாள் அமைச்சர் சற்றுமுன் அதிரடியாக கைது.! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.!
admk ex minister arrested madurai july
மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கோரி, தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று மதுரை, திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டம் செய்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட கோரி போலீசார் அறிவுறித்தியபோதும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், போலீசார் ஆர் பி உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆர் பி உதயகுமார் இந்த கப்பலூர் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கோரி, இந்த சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வந்த நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக இந்த சுங்கச்சாவடி அகற்றுவதாக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் அதனை அகற்றவில்லை. இதனை எல்லாம் கண்டித்து இன்று ஆர் பி உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டார்.
English Summary
admk ex minister arrested madurai july