அதிமுகவின் ஒற்றை தலைமை... தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி கே பழனிச்சாமி.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற இருவத்தி மூன்றாம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதுகுறித்த தகவல் அதிமுகவினரிடையே பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தான் வரவேண்டுமென்று சுவரொட்டிகளை ஒட்டினர். மறுபுறத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அதிமுகவில் ஒற்றை தலைமை எடப்பாடியார் என்று சுவரொட்டிகளை ஒட்டினர்.

இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், "அதிமுகவில் தற்போதைய நிலையில் ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை குறித்த எடப்பாடி கே பழனிசாமி தான் தெரிவிக்க வேண்டும்.

என்னை பொருத்தவரை கட்சி நன்றாக இருக்க வேண்டும். அதற்காக நான் பல தியாகங்களை செய்து உள்ளேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் அதிமுக கொடி ஏற்றிய தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஒற்றை தலைமை விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் விவாதிப்பட்டு வருவதாகவே அவர் கண்டுகொள்ளவில்லை. 

அதேசமயம் திமுக அரசாங்கம் மற்றும் திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவரின் உரை விவரம் : "வேளாண்துறை சிறந்து விளங்க வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டை அனைத்தும் தூர்வாரி கொடுத்தது அம்மா அரசு. எங்கெல்லாம் தடுப்பணைகள் கட்ட வேண்டுமோ அங்கெல்லாம் தடுப்பணைகளை கட்டி மழைக்காலத்தில் நீரைத் தேக்கி, தமிழ்நாடு செழித்து இருக்க நடவடிக்கை எடுத்தது அம்மாவின் அரசாங்கம்.

பொங்கல் பரிசாக முதலில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், பின்னர் அதனை 2500 ரூபாய் கொடுத்தோம். மக்கள் சந்தோஷமாக பொங்கலை கொண்டாடினார்கள். ஆனால், தற்போது இருக்கக்கூடிய திமுக அரசாங்கம் பொங்கல் தொகுப்பில் கொள்ளையடித்தது தான் மிச்சம்.

தமிழக மக்களுக்கு சரியான முறையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் உண்ணக்கூடிய அந்த பொங்கல் தொகுப்பை தரமானதாக கொடுக்கவில்லை. 

திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து இருக்கின்றார்கள். அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள்... உங்களுக்கு கிடைத்ததா? ஏமாற்று வேலை. கேட்டால் கணக்கு எடுக்கிறோம், அது எடுக்கிறோம், இது எடுக்கிறோம் என்று ஒரு வருடத்தை ஓட்டிவிட்டார்கள். நாளைக்கும் இதையேதான் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்"


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS SPEECH JUNE 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->