BigBreaking | கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.. 

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவு இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது இதன் மூலம் உறுதியாகிறது.

அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk eps side case judgement sep


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->