2441 பேரின் ஆதரவோடு தேர்தல் ஆணையத்தில் பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்த எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் நேற்று தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அதில், "அதிமுக ஒருங்கிணைப்பாளரான என்னுடைய ஒப்புதல் இல்லாமல் வரும் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன், கையொப்பமிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்று 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk eps EC ops


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->