அடுத்த அதிர்ச்சி! சேலத்தில் செய்தியாளர் மீது மணல் திருட்டு கும்பல் கொலைவெறி தாக்குதல்! இபிஎஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதை செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர், மண் திருடர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

"காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார். 11:05 க்கு மணலை அள்ளுங்கள்" என்று ஒரு தியாகி 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தார் அல்லவா? திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்!

இந்த அவலத்தை செய்தி சேகரிக்க சென்றவரை அடிக்கும் தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதை, விடியா திமுக ஆட்சியாளர்கள் கொடுத்த தைரியம் என்று தானே சொல்ல வேண்டும்?

தன் பணியை செய்த செய்தியாளரை தாக்கிய மண் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், செய்தியாளரைத் தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

2026-ல் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டும் திமுக-விடம் இருந்து #தமிழகத்தை_மீட்போம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Condemn to DMK Govt Sang mafia


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->