#BigBreaking | ஓபிஎஸ் முயற்சி வீண்.! சற்றுமுன் எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் முன்னிலையில் இபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமா இன்று மதியம் 1:30 மணிக்கு மேல் முறையீடு செய்யப்பட்டால், திங்கள்கிழமை பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 

சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, "அதிமுக என்ற மாபெரும் இயக்கம் இன்னும் நூறாண்டுகள் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசை.

அதனை கருத்தில் கொண்டு மீண்டும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் வலிமையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். எங்களுக்கு பாதிப்பு, உங்களுக்கு பாதிப்பு என்ற விவாதங்கள் எதுவும் தேவையில்லை. 

கசப்புகளை மறந்து நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வம் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Appeal to chennai hc ops call waste


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->