தங்களை தாங்களே மரணித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு மனதளவில் காயப்படுத்துவது தான் ஸ்டாலின் மாடலா? அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தேர்தலின் போது விடியா திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 311- ஐ நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 6 வது நாளாக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்கள்.

அறவழியில் போராடும் ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் வழியில் போராட்டம் தொடங்கும் முன்னரே திமுக அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர்கள்.

அதில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர் கண்ணன் என்பவர் வார்னிஷ் குடித்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற அதிர்ச்சி சம்பவம்.

போராட்டத்தை போர்க்களமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையே மாய்த்துக் கொள்ளலாம் என்று நிலைக்கு தள்ளிய பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்க போகிறார்?

போராடுபவர்கள், தங்களை தாங்களே மரணித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு மனதளவில் காயப்படுத்துவது தான் ஸ்டாலின் மாடலா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->