'இந்தியாவில் தைரியமாக பேசும் இரண்டே தலைவர் ஒன்று ராகுல் காந்தி, மற்றொருவர் விஜய்'; ஆதவ் அர்ஜுனா பேச்சு..!
Adhav Arjuna says there are only two leaders who speak boldly in India one is Rahul Gandhi and the other is Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: பாஜகவை எதிர்த்து தலைவர் விஜய் பேசவில்லை என திருமாவளவன், சண்முகம் போன்றோர் கூறுகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கான சான்றிதழ் ஒன்றிய அரசிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன் என நம் தலைவர் (விஜய்) கூறினார். தைரியமாக இன்று இந்தியாவில் பேசும் இரண்டே தலைவர் ஒன்று ராகுல் காந்தி, மற்றொருவர் எங்கள் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தநேரத்தில் மற்றொரு படம் (பராசக்தி) ரிலீஸ் ஆனது. ஆனால், அது வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அந்தளவு மக்கள் தூக்கிப்போட்டு விட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்பதால் ஒருவர் கூட தியேட்டர் போகவில்லை என்றும், முதலமைச்சரின் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், எங்கள் தலைவர் இன்றுவரை நஷ்டத்தை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார். இவ்வாறு திமுக படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது, ஏன் விஜய் படத்திற்கு பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை அரசியல் தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், கரூர் சம்பவத்திற்காக மட்டும் விஜய் கண்கலங்கவில்லை. நேற்று 05 ஆயிரம் பேருக்குத்தான் காவல்துறை அனுமதி அளித்தது. ஆனாலும், சாலையில் 02 லட்சம் பேர் நின்றார்கள். அவர்களை பார்க்கமுடியவில்லை என்ற வலியில் தலைவர் கண்கலங்கினார் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக பார்த்து பயந்த ஒரே இயக்கம் தவெக. நம் தலைவர் விஜய். அதனால்தான் இவ்வளவு நெருக்கடி என பேசியுள்ளார்.
English Summary
Adhav Arjuna says there are only two leaders who speak boldly in India one is Rahul Gandhi and the other is Vijay