இரட்டை இலை சின்னம்., 200 ரூபாய் கோடி மோசடி.! கள்ளகாதலியான பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


இரட்டை இலை தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் சுகேஷ் சந்திரசேகரின்  மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகையும், சுகேஷ் சந்திரசேகரின் காதலியுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரின் காதலியும், இந்தி நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. 

இதில், சுகாஷ் சந்திரசேகர் விசாரணையின் போது, 'என்னுடைய காதலி ஜாக்குலிக்கு விலை உயர்ந்த பூனை, குதிரை உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வாரி வழங்கி உள்ளேன்" என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதனையடுத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் துபாய் செல்ல முயன்றார்.

அப்போது, அவரை போலீசார் மும்பை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், அமலாக்கத்துறை முன்பு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததால், அவர் தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகினார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இன்னும் விசாரணை முடியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress jacqueline fernandez case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->