சிறு பிள்ளைத்தனமாக செயல்படுவதா.! அசிங்கமாக இல்லையா?ஸ்டாலினை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
Acting like a child! Isn that ugly RP Udayakumar insulted Stalin
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவின் படி, இந்த எழுச்சி பயணம் கடந்த ஜூலை 7 ஆம் தேதி கோவையில் இருந்து தொடங்கியது. 34 நாட்களில், பச்சை பேருந்தில் 10,000 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு, 100 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளார். இந்நிலையில், சுமார் 52 லட்சம் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி நேரடியாக உரையாடியுள்ளார் என்றும், மக்களும் உற்சாகமாக வரவேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்பி உதயகுமார் கூறுகையில், “எடப்பாடியாரின் எழுச்சி பயணத்துக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக பல்வேறு தடைகள் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த தடைகளை எல்லாம் மக்கள் பேராதரவுடன் தகர்த்து முன்னேறி வருகிறார் எடப்பாடியார். திமுக அரசு அறிவித்த திட்டங்கள் பலனின்றி போனதையும், மக்களுக்கு பட்டை நாமம் போட்டதையும் வெளிக்கொணர்கிறார். இதனால் ஆளும் அரசு பதற்றமடைந்துள்ளது” என்றார்.
அவர் மேலும், “அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலையே காழ்ப்புணர்ச்சியாக நடத்துவது தமிழ்நாட்டிற்கு சாபமாகும். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டால், மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு, சாதுமிரண்டால் காடு கொள்ளாது, பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதையே எடப்பாடியார் கடைப்பிடிக்கிறார். அவரின் எழுச்சி பயணம் எட்டு திக்குகளிலும் எதிரொலிக்கும்” என்று வலியுறுத்தினார்.
மொத்தத்தில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியின் இந்த எழுச்சி பயணம் அதிமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தி, திமுகவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
Acting like a child! Isn that ugly RP Udayakumar insulted Stalin