“இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக வருவார் சிம்பு!” – இயக்குநர் மிஷ்கின்!
Simbu will become the biggest actor in India Director Mysskin
தமிழ் சினிமாவின் அதிரடி நட்சத்திரமாக வலம் வரும் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முதன்முறையாக சிம்பு மற்றும் அனிருத் இணையும் இந்தப் படம், இசை ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் இரட்டைப் பரிசாக மாறியுள்ளது. இன்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியிடாமல், நேரடியாக திரையரங்கில் வெளியிட்டிருப்பது தனித்துவமான முயற்சியாக பேசப்படுகிறது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களை வியக்க வைத்த நிலையில், இப்போது வந்துள்ள புரோமோ வீடியோ சிம்புவின் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
புரோமோவில் கையில் அரிவாளுடன் ரத்தக் கறையுடன் தோன்றும் சிம்பு, தனது டயலாக்கில் —“நான் நிரபராதி அம்மா… நான் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துவிட்டு வருகிறேன்…” எனப் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடசென்னை உலகத்தை மையமாகக் கொண்ட புதிய கதை என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், சிம்பு மற்றும் நெல்சன் திலீப்குமார் இடையிலான மோதல் காட்சிகள் ரசிகர்களை மேலும் ஆவலுக்கு உள்ளாக்கியுள்ளன.
படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூறியதாவது:“படம் முன்னோட்டம் முந்துகிறது… வருங்காலம் வரவேற்கப் போகிறது… இந்தப் படம் சிறப்பானதாக அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதே நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், வெற்றிமாறனின் பிலிம்மேக்கிங் பாணியைப் புகழ்ந்து,“வெற்றிமாறன் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர். சிம்பு-வெற்றி கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இந்தப் படம், சிம்பு இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக உயர்வதற்கான சான்றாக இருக்கும்,”என்று பெருமையாக தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன், சிம்பு, அனிருத் — இந்த மூவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் அடுத்த பெரும் அலை எழுப்பப் போகிறது என்பதில் ரசிகர்களுக்கு எந்த ஐயமும் இல்லை.
English Summary
Simbu will become the biggest actor in India Director Mysskin