பஞ்சாபில் ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொலை!
AAP Leader Lucky Oberoi Assassinated in Punjab
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி லக்கி ஓபராய், இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 7:50 மணியளவில். ஜலந்தரில் உள்ள ஒரு குருத்வாராவில் வழிபாட்டை முடித்துவிட்டு அவர் வெளியே வந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
லக்கி ஓபராய் தனது காரில் ஏற முயன்றபோது, இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். சுமார் 8 முதல் 10 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக ஜலந்தர் காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியல் பின்னணி: கொல்லப்பட்ட லக்கி ஓபராய், ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர் தொகுதிப் பொறுப்பாளர் ராஜ்விந்தர் தியாராவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிச்சலான துப்பாக்கிச் சூடு, பஞ்சாப் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
AAP Leader Lucky Oberoi Assassinated in Punjab