ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழப்பின் போது ரூ.10 லட்சம் நிதி உதவி! - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த வாரம் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது வாழ்த்து கொடியசைத்து, போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதில் 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டி தொடங்கிய பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,"அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்யப்படும்.

முன்னதாக, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அதிக காளைகளை பிடித்து சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பையும், ஊக்கத்தையும் சமநிலையில் கொண்டுவரும் வகையில் அரசியல் உறுதிமொழியாக பாராட்டப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 lakh financial assistance case death Jallikattu participant Edappadi Palaniswami announcement


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->