நாவில் எச்சிலை ஊறவைக்கும் சிறுதானிய கொழுக்கட்டை..! வீட்டிலியே சுவையாக செய்து அசத்துங்கள்.! - Seithipunal
Seithipunal


சிறுதானிய கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : 

வரகு அரிசி - அரை கப்

குதிரைவாலி அரிசி - அரை கப்

திணை அரிசி - அரை கப்

சாமை அரிசி - அரை கப்

துருவிய தேங்காய் - ஒரு கப்

உளுத்தம் பருப்பு - அரை கப்

வெங்காயம் - ஒரு கப்

கடலை எண்ணெய் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

முதலில் உளுந்து மற்றும் அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வேண்டும்.

பின் இந்த மாவுடன் துருவிய தேங்காய் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் கலந்து பிசைய வேண்டும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பின் இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து கொழுக்கட்டை போல பிடிக்க வேண்டும்.

இறுதியாக இட்லி பானையில் 30 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான சிறுதானிய கொழுக்கட்டை தயாராகிவிடும்.

இதனுடன் தேங்காய் சட்னி, கார சட்னி மற்றும் தக்காளி சட்னியை தொட்டு சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siruthaniya kozhukatai recipe


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->