வாழைப்பூவால் இவ்வளவு நன்மைகளா? - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


மர வகைகளில் ஒன்றான வாழை மரத்தில் தண்டு முதல் கனி வரை அனைத்து பாகங்களும் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அந்த வகையில் வாழை மரத்தில் உள்ள பூவால் மக்களுக்கு என்ன நோய்கள் தீர்க்கப்படுகிறது என்பது குறித்து காண்போம்.

* பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பையில் புண், நீர்கட்டி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக வாழைப்பூ இருந்து வருகிறது.

* உடலில் செல்லும் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. இதனால், இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் வெப்பத்தை குறைத்து சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.

* கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நேரத்தில் வாழைப்பூவை உணவாக கொடுத்தால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தசோகை நோய் வராமல் காக்கும்.

* வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு பெரிதும் உதவி புரிகிறது.

* அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மலட்டு தன்மையை சரி செய்து உயிரணுவை அதிகரிக்க செய்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை வாழைப்பூவை சாறாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று கூறப்படுகிறது.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of vazhai poo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->