மாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்தால் அவ்வளவு தான்.! பெண்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடுமையான பணிகளை செய்ய கூடாது. இந்த நேரத்தில் கடுமையான பணிகளை செய்யும் பட்சத்தில், கருப்பையானது தளர்ச்சியாகி கீழிறங்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. மேலும், மாதவிடாய் சமயத்தில் விளையாடி வந்தால் கருப்பை தசைகள் இறுகி, கருப்பையின் மடிப்பு பகுதியில் இரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படலாம். 

இதுமட்டுமல்லாது கருப்பையின் மென் சுவர் விரிந்து, உடைந்து கருப்பையில் கட்டிகள், கருப்பை வீக்கம் மற்றும் கருப்பை திசு சிதைவு போன்ற பிரச்சனையும் ஏற்படுத்தும். மாதவிடாய் களத்தில் கர்ப்பப்பைக்கு கூடுதலாக இரத்த ஓட்டம் சென்று வருவது அவசியமான ஒன்றாகும். இதனால் பெண்கள் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு ஓய்வை வழங்க வேண்டும். 

இதன் காரணமாகவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை மறைமுகமாக நமது முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பிற பணிகளில் இருந்து விலக்கு அளித்து, ஓய்வளித்து வந்தனர். பிற்கால புரிதல் மற்றும் நாகரீக வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் மாற்றப்பட்டு, மாதவிடாய் காலத்தில் கூட ஓய்வு கிடைக்காமல் பெண்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மாதவிடாய் சமயத்தில் பெண்களின் இல்லங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில், உறங்கும் நேரத்திலோ அல்லது அமர்ந்திருக்கும் நேரத்தில் இரத்தப்போக்குடைய வசத்தினை பூச்சிகள் அறிந்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில் உடல் அமைதி மற்றும் உடல் ஓய்வு கட்டாயம் தேவையான ஒன்றாகும்.

பெண்களின் உடலில் கருப்பையை கருத்தரிப்பதற்கு எதுவாக அமைக்க “என்டோமெட்ரியம்” என்கிற சவ்வு கரைக்கப்பட்டு, வளர வைக்கப்பட்டு தாமாகவே பக்குவப்படுத்திக்கொள்ளும் தன்மையை ஏற்படுத்திக்கொள்கிறது. மாதவிடாய் தருணத்தில் உடலில் இருந்து 35 மிலி முதல் 40 மிலி அளவிலான இரத்தப்போக்கு ஏற்படுகிறது. 

உடலின் நீர்சத்து, புரதம், இரத்தம், சளிச்சவ்வு, உப்புகள் மற்றும் எண்டோமெட்ரிய திசுக்கள் ஆகியவை கருஞ்சிவப்பு நிறத்தினை கொண்ட திரவமாக இரத்தம் வெளியேற்றம் அடையும். இது மன அமைதியுடன் ஓய்வெடுக்கும் பெண்களுக்கு 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை சீரான இரத்த போக்காக ஏற்படும். மாதவிடாய் களங்களில் ஓய்வெடுப்பது கர்ப்பப்பையின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களின் உற்பத்திக்கு வழிவகை செய்யும். 

பிற பொருட்களின் விற்பனைக்காக மாதவிடாய் காலத்தில் ஓடுதல், குதித்தல், விளையாடுதல், வாகனம் இயக்குதல், உடலுக்கு அதிகளவு வலியை கொடுக்கும் பணிகளை செய்தல் போன்றவை செய்யலாம் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இரத்தப்போக்கில் மாற்றம், கர்ப்பப்பை தசை இறக்கம், கர்ப்பப்பை தசை இறக்கத்தால் வீக்கம், கர்ப்பப்பை பெரிதாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மாதவிடாய் நேர சுத்தமும் முக்கியமான ஒன்றாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WOMEN SAFETY TIPS DURING PERIODS


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->