மூதாட்டிகளை கொலை செய்து உடலுறவு கொண்ட சைக்கோ சீரியல் கில்லர்ஸ் கைது.!
Young man killed old womens and raped
உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டிகளை கொலை செய்து உடலுறவு கொண்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இதனிடையே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஹூன்ஹூனா கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் 2 பேர் கொலை செய்ய முயற்சி செய்தனர். இதில், அமரேந்தர் என்பவரை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். மேலும் அவரது கூட்டாளியான சுரேந்தர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் அமரேந்தரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டிகளை கொன்று உடலுறவு கொண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Young man killed old womens and raped