#புதுச்சேரி || மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி கலித்தீர்தாள்குப்பம் வி.கே.நகரை சேர்ந்தவர் தொழலாளி மதுரை. இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மதுரைக்கு மது பழக்கம் இருந்ததால், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். 

இதுயடுத்து நேற்று முன்தினமும் இதேபோல் மது அருந்திவிட்டு மதுரை வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இதையடுத்து மதுரை வீட்டிலேயே தூங்கி விட்டு, பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 

ஆனால் வெகு நேரமாகியும் மதுரை வீடு திரும்பாத நிலையில், திருபுவனை சுப்ரீம் நகரில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மதுரையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker drinking poison in Puducherry


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->