தலையை துண்டித்து, உடலை கூறுப்போட்டு இரு பெண்கள் அடுத்தடுத்து நரபலி - வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal



கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா : எர்ணாகுளம் அடுத்த திருவில்லாவில் மருத்துவ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் தங்களது வீட்டில் செல்வமும், வளமும் பெருகுவதற்கு ஒரு சாமியாரை சந்தித்துள்ளனர். 

அவர்கள் பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கவே, இதனை அடுத்து ஒரு ஏஜெண்டை பிடித்து கடவேந்தரா என்ற பகுதியில் இருந்து ஒரு இளம் பெண்ணை கொண்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி இந்த பெண்ணை காணவில்லை என்று பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டதில், ஏஜென்ட் வீட்டில் சிக்னல் கடைசியாக கிடைத்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த ஏஜெண்டை கைது செய்து போலீசார் நடத்திய சிறப்பு விசாரணையில், ஏஜென்ட் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மருத்துவ தம்பதியையும் கைது செய்தனர்.

இதற்கிடையே காலடி பகுதியில் மாயமான பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த நரபலியை நிகழ்த்தியதும் இந்த ஏஜெண்டை சேர்ந்தவர் தான் என்பதால், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women human sacrifice kerala


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->