குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்த பெண்! பொதுமக்களின் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது அந்த ரயிலில் கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் குழந்தையை காண்பித்து பிச்சை எடுத்தார். 

குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருந்தன. அந்த இளம் பெண் குழந்தையின் காயத்தின் மீது கையை வைத்து அழுத்தி குழந்தையை அழ வைத்து அதனைக் காண்பித்து பிச்சை எடுத்துள்ளார். 

இதனை கவனித்த பயணிகள், இது தொடர்பாக ரயிலில் டிக்கெட் பரிசோதரிடம் தெரிவித்துள்ளனர். அந்த ரயில் எர்ணாகுளம் ரயில் நிலையத்திற்கு வந்ததும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பெயரில் போலீசார் குழந்தையை காண்பித்து பிச்சை எடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த குழந்தையை எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. 

இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தைக்கும் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for begging child


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->