கணவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் இருந்த மனைவி... சென்னையில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


நிர்வாணமாக இறந்து கிடந்த கணவனுடன் இரண்டு நாட்கள் வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக் பாபு (53). இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார், மற்றும் மகள் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனால், அசோக் பாபு அவரது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு நாளாக அவரது மகள் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால், பதில் இல்லாததால் அவர் வேப்பேரி காவல்துறையினருடன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

அவரின் அருகில் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி கதவை உள்பக்கமாக தாழிட்டிருந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்மினியை அரசு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife lived two with her husband dead body


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->