கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.! மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் ஒரு வயது குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் கல்குந்தே அக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி ஸ்வேதா(24). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராகேசிற்கு, வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதையறிந்த ஸ்வேதா கணவரிடம் கள்ளக்காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் கள்ளக்காதலை கைவிட மறுத்த ராகேஷ் ஸ்வேதாவை தாக்கி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் இதைப் பற்றி ராகேஷின் குடும்பத்தாரிடம் ஸ்வேதா கூறியும், அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட தகராறில், கூடுதலாக வரதட்சணை வாங்கி வருமாறு கூறி ஸ்வேதாவை அடித்து துன்புரித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்வேதா குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ஏரியில் பெண் பிணம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியிலிருந்து ஸ்வேதாவையும், அவரது குழந்தையின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கள்ளத்தொடர்பை கணவர் கைவிட மறுத்தது, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ராகேஷ் கைது செய்தனர். மேலும் இது குறித்து ராகேஷிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife commits suicide due to husband illegal relationship in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->