வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வேலி; மேற்கு வங்க முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
West Bengal Chief Minister makes bold announcement regarding BSF fencing along the Bangladesh border
நடைபெற்று முடிந்த மேற்கு வங்க 207 இடங்களை கைப்பற்றி, முதல் முறையாக பாஜக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) நிலத்தை மாற்றித் தர தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் மேலும் கூறியதாவது; வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நிலத்தை மாற்றித் தர மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன என்று கூறியுள்ளார்.
இன்னும் 45 நாட்களுக்குள் நிறைவுபெறும் என்றும், இது எனது அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய அரசின் முதன்மைத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' சுகாதாரத் திட்டம் மற்றும் மத்திய அரசின் வேறு பல திட்டங்களையும் மாநிலத்தில் அமல்படுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி, பள்ளி வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கும் முன்மொழிவுக்கும் மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்தோடு, மத்திய மற்றும் மாநிலப் பணிப்பிரிவுகளின் கீழ் வரும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளதாகவும் முந்தைய அரசு அரசியலமைப்பை மீறி 'பாரதிய நியாய சம்ஹிதா' சட்டத்தை அமல்படுத்தவில்லை. தற்போது அச்சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 2025-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையை முந்தைய அரசு புறக்கணித்திருந்த நிலையில், தற்போது மேற்கு வங்க அமைச்சரவை, அச்சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும், சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
West Bengal Chief Minister makes bold announcement regarding BSF fencing along the Bangladesh border