"கைதியுடன் வீடியோ கால்!": கர்நாடக பெண் இன்ஸ்பெக்டர் மீது லஞ்சக் குற்றச்சாட்டு - காவல் துறையில் பரபரப்பு!
Viral Video Controversy Karnataka Inspector Under Investigation Over Video Call with Inmate
சமூக வலைதளங்களில் வைரல்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் அதிகாரி ஒருவர் தொலைபேசியில் பேசியபடி ஆடைகளைக் கழற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதிகாரியின் அடையாளம்: இச் சம்பவம் குறித்துக் காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீடியோவில் இருப்பவர் கர்நாடக மாநில தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் என்பது கண்டறியப்பட்டது.
சிறைத் தொடர்பும் வீடியோ கசிவும்
ரவுடியுடன் வீடியோ உரையாடல்: பெலகாவியிலுள்ள ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் நண்பரான சாய்குமார் என்ற ரவுடியுடன், 2024-ஆம் ஆண்டில் அப் பெண் அதிகாரி பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவே இது என்பது தெரியவந்தது.
புகாரும் விடுமுறையும்: தனியுரிமை மீறி அக் காணொலியை வெளியே கசியவிட்டதாகச் சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் இன்ஸ்பெக்டர், தற்போது விடுமுறையில் சென்றுள்ளார்.
எதிர் குற்றச்சாட்டுகளும் துறைரீதியான விசாரணையும்
லஞ்சம் மற்றும் சலுகைகள்: பெண் இன்ஸ்பெக்டர் மீது ரவுடி சாய்குமார் அளித்த எதிர் புகாரில், சிறையில் இருந்தபோது லஞ்சம் பெற்றுக்கொண்டு கைபேசி, மதுபானம் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களைத் தங்களுக்கு அப் பெண் அதிகாரி வழங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணை தீவிரமாக்கம்: சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்களைப் பொய் வழக்குகளில் மிரட்டுவதாக அவர் அளித்த புகாரின் பேரில், அப் பெண் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் சிறை அதிகாரிகள் மீதான ஊழல் விவகாரம் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Viral Video Controversy Karnataka Inspector Under Investigation Over Video Call with Inmate