நேற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


நேற்று முதன் முதலாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் பக்​கால் மற்​றும் கவுரி பகு​தி​களுக்கு இடையே செனாப் ஆற்​றின் குறுக்கே 1,178 அடி உயரத்​தில் ரயில்வே பாலம் கட்​டப்​பட்டுள்​ளது. இது உலகின் மிக உயர​மான ரயில் பால​மாகும். பிரதமர் நரேந்​திர மோடியால் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 06-ஆம் தேதி செனாப் ரயில் பாலத்தை நாட்​டுக்கு அர்ப்​பணிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்​ரல் மாதம் ஜம்மு - ஸ்ரிீநகர் இடையே வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில் சேவையை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்​தார்.

பாது​காப்பு கருதி செனாப் ரயில் பாலத்​தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்​தில் வந்தே பாரத் ரயில் இயக்​கப்​பட்டு வந்​தது. பின்​னர் படிப்​படி​யாக ரயி​லின் வேகம் அதி​கரிக்​கப்​பட்டு வந்​த நிலையில், நேற்று இந்த செனாப் ரயில் பாலத்​தில் வந்தே பாரத் ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vande Bharat train runs at 100 kmph on Chenab railway bridge in Kashmir


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->