பரவிய வதந்தி! ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்! உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியை நம்பி, ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பில்பூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா- அமிர்தசரஸ் செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் தீயை அணைக்கும் கருவியை சிலர் பயன்படுத்தி உள்ளனர்.

அந்த ரயில் பெட்டி முழுவதும் புகை கிளம்ப, சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக எண்ணி கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

சில பயணிகள் உயிரை காப்பற்றிக்கொள்ள ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். ஒருவழியாக பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,  ரயில் மெதுவாக செல்லும்போது தான் பயணிகள் குதித்ததாகவும் அதனால் உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uttar pradesh Train Fire Extinguisher


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->