அமெரிக்க வெளியுறவு அமைச்சர் -ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், எச்1பி விசா குறித்து பேசியிருக்கலாம் என தகவல்..!
US Secretary of State and Jaishankar meet
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பில், அமெரிக்கா வரி விதித்தது. இதனையடுத்து, இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சம் ஆக டிரம்ப் உயர்த்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வர்த்தக விவகாரம் மற்றும் எச்1பி விசா குறித்து இருவரும் பேசியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இருவரும் இந்தாண்டு ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் சந்தித்து பேசியிருந்தனர். வர்த்தக பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
US Secretary of State and Jaishankar meet