யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு உயர்வு – வரும் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, யு.பி.ஐ. (UPI) வழியாக செய்யப்படும் தினசரி பரிவர்த்தனை வரம்புகள் பல்வேறு பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளன.

முன்னதாக பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமியம், கடன் மற்றும் தவணை செலுத்துதல், அரசு கட்டணங்கள் போன்றவற்றுக்கான யு.பி.ஐ. பரிவர்த்தனை தினசரி அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை செலுத்தும் வரம்பு ₹2 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நகை வாங்கும் பரிவர்த்தனைகளுக்கான வரம்பும் ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

இருப்பினும், தனிநபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வரம்பு முந்தையபடி ₹1 லட்சமாகவே தொடரும். அதேபோல் கல்வி கட்டணம், மருத்துவ செலவுகள், IPO (முதல் பங்கு வெளியீடு) முதலீடுகள் போன்ற பிரிவுகளில் பரிவர்த்தனை வரம்பு முன்னர் இருந்தபடி ₹5 லட்சமாகவே நீடிக்கும்.

இந்த மாற்றப்பட்ட புதிய வரம்புகள் வரும் 15ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் முதலீடு, கடன் திருப்பிச் செலுத்தல், நகை வாங்குதல் போன்ற முக்கிய நிதி செயல்பாடுகளில் UPI பயன்பாடு மேலும் விரிவடையவுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UPI transaction limit hike effective from the 15th


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->