இவளுடன் வாழ்ந்தால் என் உயிருக்கே ஆபத்து.. மனைவியைக் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்! விவாதமாகும் வினோத முடிவு!
up husband wife illegal affair issue
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவம், ஒரு த்ரில்லர் சினிமா பாணியில் அமைந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகமும் செல்போன் ரகசியமும்:
ராஜ்குமாரின் மனைவி, வேறொரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபருடன் ரகசியத் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி சண்டையிட்டு வந்த மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜ்குமார், ஒருமுறை அவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அதைப் பிடுங்கிச் சோதித்தார். அதில் இருந்த விஷயங்கள் அவரை உறைய வைத்தன.
கொலைத் திட்டமும் 'ட்ரம்' ரகசியமும்:
மனைவியின் செல்போனில் இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில், கணவனை 15 துண்டுகளாக வெட்டி சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த கொலைச் செய்திகள் அதிகளவில் சேமிக்கப்பட்டிருந்தன. மேலும், தனது காதலனுடன் சேர்ந்து ராஜ்குமாரை அதேபோல் தீர்த்துக்கட்ட அவரது மனைவி திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது.
பஞ்சாயத்தும் முடிவும்:
உடனே ஊர் பஞ்சாயத்தைக் கூட்டிய ராஜ்குமார், நடந்த உண்மைகளைக் கூறினார். பஞ்சாயத்தாரிடம் அந்தப் பெண், "எனக்குக் காதலனுடன் செல்ல வேண்டும்" என அடம்பிடித்தார். "இவளுடன் வாழ்ந்தால் என் உயிருக்கே ஆபத்து; இவளை அவளது காதலனிடமே அனுப்பி வையுங்கள்" என ராஜ்குமார் கைகூப்பினார். உயிருக்குப் பயந்த கணவன், மனைவியை அவரது காதலனுடன் முறைப்படி அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணும் சந்தோஷமாகத் தனது காதலன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மனைவியிடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நிம்மதியுடன், ஒரு குழந்தைக்குத் தந்தையான ராஜ்குமார் சோகத்துடன் வீட்டிற்குத் திரும்பிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
up husband wife illegal affair issue