இந்து கோயிலுக்கு இடம் கொடுத்த இஸ்லாமியர்கள்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தின் முன்னுதாரணமாக பார்க்கும் வகையில், இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை சிவன் கோயில் கட்ட நன்கொடையாக வழங்கிய சம்பவம் சிறுபான்மையினரிடையே நல்லிணக்க உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

சந்தவுலி மாவட்டத்தில் உள்ள தப்ரி கிராமத்தைச் சேர்ந்த சக்லைன் ஹைதர், தம் உறவினர் அக்தர் அன்சாரிக்கு 1,364 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். 

அந்த இடத்தில் வீடு கட்ட அக்தர் அஸ்திவாரம் தோண்டியபோது பழமையான சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். சிவலிங்கம் தற்போது அருகிலுள்ள கோவிலில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் பரவியவுடன், பக்தர்கள் பெருமளவில் கூடினர். கிராம மக்கள் அந்த இடத்தில் புதிய சிவன் கோயில் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஹைதர் மற்றும் அன்சாரியின் குடும்பம் உடனடியாக ஏற்று, நிலத்தை கோயிலுக்காக வழங்க ஒப்புக் கொண்டனர்.

சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கள் அன்று, சிவலிங்கம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜலாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டனர்.

இந்த சம்பவம் கிராமத்தில் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் மத நல்லிணக்கத்திற்கு ஓர் இனிய எடுத்துக்காட்டாக பெரிதும் பாராட்டப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, நிலைமையை கண்காணித்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் திரிபாதி உள்ளிட்ட பலரும் ஹைதரை நேரில் சந்தித்து பாராட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Hindu Temple Islam Person land donate


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->