டெல்லியில் நடுரோட்டில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்.. 3 பேர் படுகாயம்.!
Unknown persons gun shoot in delhi
டெல்லியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லியில் சுபாஷ் நகர் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Unknown persons gun shoot in delhi