திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை!
Two girls were sexually assaulted at a wedding event
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்காம்பூர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள்அருகில் உள்ள கிராமத்தில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.அப்போது திருமணத்திற்கு சென்ற சிறுமிகளை அதேபகுதியை சேர்ந்த 4 பேர் கடத்தி சென்று ஆள் நடமாட்டமற்ற இல்லாத பகுதிக்கு கடத்தி சென்ற 4 பேரும் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விசாகப்பட்டினத்திற்கு தப்பியோட முயன்ற 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Two girls were sexually assaulted at a wedding event