தொடரும் சோகம்.. ரயில் விபத்தில் சிக்கியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று ரெயில்கள் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 294 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் மேதினிப்பூர் நகரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வேன் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில், காயங்களுடன் இருந்த பயணிகளில் பலருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த பயணிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, ரெயில் விபத்தில் சிக்கி ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தவர்கள், சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், மீண்டும் மற்றொரு விபத்தில் சிக்கி காயமடைந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train accident victims traveled bus met accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->