பத்ராச்சலம் அருகே பயங்கரம்...! கோதாவரி ஆற்றில் மூழ்கிய இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு...!
Tragedy near Bhadrachalam Bodies two students who drowned Godavari River recovered
ஆந்திர பிரதேசத்தில் அமராவதியில் உள்ள கல்லூரியில் பயிலும் 7 மாணவர்கள், தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் அருகே உள்ள கூனவரம் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு கோதாவரி நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் 5 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

உயிர் தப்பிய இரு மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
இதில் ஸ்ரீதர் மற்றும் அபிராம் ஆகிய இரு மாணவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன.
மேலும்,காணாமல் போன தேஜு, நவதீப் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மற்ற 3 மாணவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
Tragedy near Bhadrachalam Bodies two students who drowned Godavari River recovered