உ.பி: சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய மினி பேருந்து... பாதுகாவலர் உயிரிழந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய மினி பேருந்து மோதியதில் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள லுஹர்லி சுங்கச்சாவடியில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய மினி பேருந்து சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதுகாவலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாதுகாவலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் புலந்த்ஷாரின் அகமத்கர் மாவட்டத்தில் வசிக்கும் சோட் லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மினி பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளதாகவும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிபேருந்து, டிவைடரை உடைத்து மற்றொரு பாதையில் தரையிறங்கி பாதுகாவலர் மீது மோதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tollgate Security guard killed in mini bus collision in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->