சிறுமி படுகொலை - புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் சோலை நகரைச் சேர்ந்த நாராயணன் - மைதிலி தம்பதியினரின் 9 வயது மகள் ஆர்த்தி கடந்த சனிக்கிழமை  மாயமானார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காணாமல் போன சிறுமி  3 நாட்களுக்கு பிறகு வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த கருணாஸ் என்பவர் தனியாக வசிக்கும் விவேகானந்தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அப்போது அவர் இறந்ததால், கை, கால்களை கட்டி கால்வாயில் வீசியதும் தெரிய வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகள் இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today bandh in puthuchery for girl died issue


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->