நேருக்கு நேர் மோதிய கார் - லாரி; பரிதாபமாக பறிபோன 3 உயிர்.!
three peoples died and four peoples injured for accident in assam
அசாம் மாநிலத்தில் உள்ள உடல்குரி மாவட்டத்தில் டின்சுக்கியாவிலிருந்து திமாகுட்சி நோக்கி 6 பேருடன் கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், இந்தக் கார் சைக்கியா சுபுரி என்ற பகுதியின் அருகே வந்துக் கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து எதிரில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் மற்றும் காரில் பயணம் செய்த மூன்று பேர் என்று மொத்தம் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதை பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died and four peoples injured for accident in assam