பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்த 3 குழந்தைகள் - பெங்களுருவில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் மஞ்சுளா கர்ப்பமானார். ஆனால், அவரை கவனிக்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனந்துக்கும் போதிய வருமானம் இல்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமலும், கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடிய உணவுகள் மற்றும் மருந்துகளை வாங்கி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். 

இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, ஆனந்த் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே மூன்று குழந்தைகளும் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிறந்த ஒரு சில நிமிடத்தில் 3 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three babies died after birth few minutes in bengalur


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->