புதுச்சேரி || அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், கல்மேடுபேட் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவருக்கு திருமணமாகி அருணாதேவி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவர் பொது கழிப்பறையில் சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவதன்று, அருணாதேவி கணவருக்கு சாப்பாடு கொடுக்க கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு சுகுமார் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Worker Death Who drink too much alcohol


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->